Tuesday 23 April 2013

சிமிட்டல்கள்







உன் காலங்களும்
கனவுகளும்,காதலும்
முற்றுப் பெறுவது
என்னிடத்தில் என்கிறாய்
நான் முழுமையடைவது
உன் காதலால் தான்
என்று அறியாதவனாய்

-

எனது,
குறைகளையும்,குற்றங்களையும்
கண்டு கொள்ளாதவனாய்
நீ,
நாடகம் நடிக்கும் நிமிடங்களில்
பொங்கி வழிவது,
என் கண்ணீர் மட்டுமல்ல
உனக்கான
என் காதலும் தான் ..

-

மேகமில்லா வானமும்
தாகமில்லா நாட்களும்
உரைந்து நிற்கும் உணர்ச்சிகளும்
உணர்த்திச் செல்கின்றன
உன் இன்மையினையே ...!

-

என் உறக்கம் கலைத்து
உன் உறக்கம் காண
விழிக்கும்  வேளைகளில்
ஏமாந்து விடுகின்றேன்
எனக்கு முன்னர்
நீ விழித்துக் கொள்வதனால்

-

வெற்று ,
வரிகளில் உணர்ந்த
காதலினை,
என் வெட்கங்களில்
உணர்கின்றேன் ,
உன் வருகைக்குப் பின்

-

உன்னை,
மறக்கத் துடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகளிலேயே
நீந்தித் திளைக்கின்றேன்
என்பதை மட்டும்
ஏனோ என்னிதயம்
ஏற்க மறுக்கின்றது



கண்ணம்மா

2 comments:

  1. என் உறக்கம் கலைத்து
    உன் உறக்கம் காண
    விழிக்கும் வேளைகளில்
    ஏமாந்து விடுகின்றேன்
    எனக்கு முன்னர்
    நீ விழித்துக் கொள்வதனால்...
    Arumayaana varikal......

    ReplyDelete
  2. எப்படிங்க கண்ணம்மா???????????????? சத்தியாம நினைவுகள் எங்கோ போகுது......வெட்கத்துல கன்னம் சிவக்குது....
    அருமை..... அருமை....

    ReplyDelete