Tuesday 30 April 2013

நட்பின் அதீதம்



உன் அளவில்லா அழகை

அப்பட்டமாய் நான் ரசித்தபோதும்

உன் கண்களை தவிர

வேறெதையும் பார்த்து நான் பேசியதில்லை.



நீ தொட்டுப் பேசியபோதும்,

தட்டிக் கொடுத்தபோதும்,

அரவணைத்து ஆற்றியபோதும் – நான்

கடுகளவும் கள்ளம் கொண்டதில்லை.



உன் பெயரையும்

என் பெயரையும் இணைத்து

ஏதேதோ புனைத்தபோதும்

நமக்குள் கலக்கம் இருந்ததேயில்லை.



நடுநிசியில் உனைப்

பார்க்க நினைத்தபோதும்,

விடியும் வரை உன்னுடன் கதைத்தபோதும்,

விடிந்தப்பின் உன் மடியில் சாய்ந்தபோதும்

நீ கோபம் கொண்டதில்லை

நான் தாபம் கொண்டதில்லை.



இன்னும் சொல்லப்போனால்

உன் படுக்கையறை வரை

எனக்கு அனுமதியிருந்தும்

என்நிலை நான் கடந்ததில்லை.



எனக்கென உதிர்க்கும்

புன்னகையை மறைத்து - இன்று

எனை கடந்து செல்கிறாய்,

எனக்கு தெரியும்,

இன்னும் ஐந்து நிமிடத்தில்

எனை அழைத்து

“சாரிடா, அத்தையும் மாமாவும் கூட வந்தாங்க ”

என சொல்வாய் என்று....

3 comments:

  1. Kadaisi irandu varikal nenjai thaikkirathu yoki, Ellorum intha nilayai oru naal kadanthe aaka vendum...Arumayaana pathivu

    ReplyDelete
  2. aathi muthal antham varai ovvoru varigalum asathal .. pala murai padithum thigatatha varigal, arumai arumai

    ReplyDelete
  3. நட்புக்கு ஆண் பெண் பேதம் கிடையாது.... நல்ல வரிகள் நண்பா...

    ReplyDelete