Saturday 27 April 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



சென்னையில்  ஒரு இலக்கிய அமைப்பினர், ஒரு கவிதை போட்டியை அறிவித்திருந்தார்கள். தேர்வு பெரும் முதற் கவிதைக்கு முன்னூறு ரூபாய், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு பெரும் கவிதைக்கு 200 ரூபாய் மற்றும் 300 ரூபாய்.
பாரதி அன்பர்கள் ஒரு கவிதை எழுதுமாறு வற்புறுத்தினர். முதலில் பாரதியார் மறுத்தாலும் பின்னர் ஒரு பாடலை எழுதி அனுப்பிவைத்தார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று தொடங்கும் பாடல்தான் அது.

போட்டியில் பாரதியின் கவிதை மூன்றாவது பரிசு பெற்றதாக அறிவித்தார்கள். பரிசு பெற்ற மூன்று பாடல்களையும் வெளியிட்டனர்.
முதலிரண்டு பரிசுகளை பெற்ற கவிதைகளில் தரமோ, இலக்கிய நயமோ, பொருள் வளமோ இல்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

பாரதிக்கு உலக நடப்பு தெரியும். அதனால் பாரதியார் "அந்த அமைப்பினர் யாருக்கோ கொடுக்கத் தீர்மானித்த பரிசினை நேரடியாக கொடுக்க முடியவில்லை என்று ஒரு போட்டி வைத்துக் கொடுத்தார்கள். அதற்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்?" என்று அன்பரைத் தேற்றினார்.
                
   பாரதி அன்பர்கள் அன்று சொன்னதை போலவே போட்டியில் முதலாவது, இரண்டாவது பரிசுகளை பெற்ற பாடல்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. மூன்றாம் பரிசு பெற்ற பாடலோ இன்றும் மக்களிடம் பெரும்புகழ் பெற்று உலா வருகிறது.

மாலினி

2 comments:

  1. Very Good Info
    Keep it up malini...
    Where is your poem?

    ReplyDelete
  2. நல்ல தகவல் மாலினி...

    ReplyDelete