Friday 26 April 2013

நீ, நான்..





உறக்கம் கொய்து
உணர்வுகளை நெய்தவன்
நீ 
உனக்காகவே
உறங்குவதைப் போல்
உருவம் மாற்றியவள் நான்

காலங்கள் கடந்து
கதை பேச
காரணம் தேடுபவன்
நீ
உன்னையே,
என்  காலங்களாக்கிக் கொள்ளும்
கனவு காண்பவள் நான்

எனது கை கோர்த்து ,
என்னை உனதாக்கிக் கொள்ளும்
எண்ணம் கொண்டவன்
நீ
உன் உள்ளங் கைகளுக்குள்
என் உலகைக் கரைத்திடும்
ஏக்கம் கொண்டவள் நான்

ஊடலுக்குப் பின்
என்னை,
சமாதானம் செய்தவனாய்
சந்தோஷத்தில் திளைக்கின்றாய்
நீ
உன் இன்பங்களுக்காக
என் இன்னல்கள்
மறைத்தவளாய் வாழ்கின்றேன்
நான்

உன்
நேசமும்,நினைவுகளும்
காதலும்,கனவும்
நானென்று பிதற்றுகின்றவன்
நீ
என் சுவாசம் நீ
என்று அறியாமல்

உன்னுயிர் என்னுளென்று
உருகித் திரிபவன்
நீ
உன் நிழலாய்
நான் உடன் வருவதை
மறந்து விட்டு 


கண்ணம்மா

3 comments:

  1. நீ, நான்..Kavithai Perazahu....

    ReplyDelete
  2. ஒரு பெண் மனதையும் ஆண் மனதையும் அப்படியே சொல்லிட்டிங்க கண்ணம்மா...
    அருமை.... வாழ்த்துகள்....

    ReplyDelete