Thursday 18 April 2013

எல்லாம் உனக்காக....





எனக்காக நீயும்
உனக்காக நானும்
வாழ்ந்தோம் சில காலம்....
 உன் அன்பை   உணர்ந்த
சில நாள்களிலேயே
உன்னுள் கலந்துவிட்டேன்

ஒவ்வொரு நொடியும்  
உன் வரவை எண்ணி
மகிழ்ந்திருந்தவள் - இன்று
ஒவ்வொரு நொடியும்  
உன் பிரிவை  எண்ணி
தவித்திருக்கிறேன்

நீ விரும்பிய எதையும்
உனக்காய் செய்து-மகிழும்
ஆர்வம் கொண்டவள்
என்பதால்தான் என்னவோ 
காதலையும் உனக்காய்
இழந்திருக்கிறேன்

மடந்தை பருவத்தில்
மதியோடு இருந்தவள்
அரிவை பருவத்தில்
அறிவிழந்து
ஒப்புக்கொண்டேன்
உன் வார்த்தையை

அன்று  
நாம் என்றாய்
இன்று
யார் என்கிறாய்
நாளை?
வேண்டாம் விட்டுவிடு
நம்  உறவுகளாவது
உயிர் வாழட்டும்



சித்ரா

2 comments:

  1. வேண்டாம் விட்டுவிடு
    நம் உறவுகளாவது
    உயிர் வாழட்டும்-------Awesome feel

    ReplyDelete
  2. காற்றுள்ள வரை காதல் வாழும்..... வலியயை அருமையாக பதிவு செய்துள்ளீர் சித்ரா....

    ReplyDelete